திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையாருக்கு நாளை கொடியேற்றம்

 

யாழ்.திருநெல்வேலி ஸ்ரீ தலங்காவற் பிள்ளையார் கோயில் சோபகிருது வருட மஹோற்சவப் பெருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(20.06.2023) காலை-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 20 தினங்கள் இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா காலை, மாலை உற்சவங்களாக  இடம்பெறவுள்ளது.

எதிர்வரும்- 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு கைலாசவாகனத் திருவிழாவும், அடுத்தமாதம்-01 ஆம் திகதி சனிக்கிழமை இரவு திருமஞ்சத் திருவிழாவும், 05 ஆம் திகதி புதன்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-08 மணியளவில் தேர்த் திருவிழாவும், 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலயப் பிரதமகுரு தெரிவித்துள்ளார்.