யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம்  சிறைச்சாலையின் 100 ஆவது சிறைச்சாலைப் பாதுகாவலர் அணியின் 8 ஆவது  ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை  சனிக்கிழமை(03.06.2023) காலை-08.30 மணி முதல் மாலை-03.30 மணி வரை யாழ்ப்பாணம்  சிறைச்சாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.