ஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்


ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை செவ்வாய்க்கிழமை (13.02.2024) காலை-09.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.      

தொடர்ந்தும்-12 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-19 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-08.30 மணியளவில் திருமஞ்சத் திருவிழாவும், 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை-05 மணியளவில் வேட்டைத் திருவிழாவும்,  22 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-08.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், 24 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலய நிர்வாகசபையினர் தெரிவித்துள்ளனர். 

(செ.ரவிசாந்)