ஞானச்சுடர் சஞ்சிகையின் பங்குனி மாத வெளியீட்டு நிகழ்வு

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் பங்குனி மாத 327 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (28.03.2025) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் வ.கணேசமூர்த்தி மலரின் வெளியீட்டுரையையும், ஆசிரியர் நி.பாபுதரன் மலரின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்துவர்.