யாழ்.மல்லாகம் மகா வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் நாடாளுமன்ற அமர்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (27.05.2025) முற்பகல்-11.30 மணியளவில் மேற்படி பாடசாலையின் மண்டபத்தில் அதிபர் சி.கணேசராசா தலைமையில், உயர்தரப் பாட அரசியல் ஆசிரியர் வி.கலாகரனின் நெறிப்படுத்துதலில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா பிரதம விருந்தினராகவும், யாழ்.மயிலணி சைவமகாவித்தியாலய அதிபர் பா.பார்த்தீபன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
கடந்த-2024 நவம்பர் மாதம் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றிருந்த நிலையிலேயே மாணவர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இதன்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தக் கூடிய சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு மாணவர் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
மாணவர்களின் நாடாளுமன்ற அமர்வை முழுமையாகப் பார்வையிட்ட விருந்தினர்கள் உள்ளிட்ட பலரும் மாணவர்களின் திறமையை வெகுவாக மெச்சிப் பாராட்டியதுடன் அவர்களுக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
கடந்த-2024 நவம்பர் மாதம் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றிருந்த நிலையிலேயே மாணவர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இதன்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தக் கூடிய சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு மாணவர் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
மாணவர்களின் நாடாளுமன்ற அமர்வை முழுமையாகப் பார்வையிட்ட விருந்தினர்கள் உள்ளிட்ட பலரும் மாணவர்களின் திறமையை வெகுவாக மெச்சிப் பாராட்டியதுடன் அவர்களுக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.