வரலாற்றுப் பிரசித்திபெற்ற இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை வியாழக்கிழமை (29.05.2025) சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நாளை காலை-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து சுவாமி சித்திரத் தேருக்கு எழுந்தருளி அதனைத் தொடர்ந்து முற்பகல்-10.30 மணியளவில் சித்திரத் தேர் வீதி உலா நடைபெறும்.
இதேவேளை, இவ் ஆலயத்தில் குடைத் திருவிழா இன்று புதன்கிழமை(28.05.2025) காலையும், சப்பரத் திருவிழா இன்று இரவும் சிறப்பாக இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.