உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் (05.05.2025) , நாளை செவ்வாய்க்கிழமையும் (06.05.2025) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள சகல பாடசாலைகளும் நேற்றைய தினம் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன. இந் நிலையில் நாளை மறுதினம் புதன்கிழமை அனைத்துப் பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுமெனக் கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது.