ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (03.05.2025) முற்பகல்-10.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.

07 ஆம் திகதி புதன்கிழமை மாம்பழத் திருவிழாவும், 08 ஆம் திகதி வியாழக்கிழமை திருப்புகழ் உற்சவமும், 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூந்தண்டிகை உற்சவமும், 10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணியளவில் தேர்த் திருவிழாவும், 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

மஹோற்சவத்தின் பத்துத் தினங்களும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.