ஏழாலையில் மாபெரும் இரத்ததான முகாம்

ஜொனியன்ஸ் சனசமூக நிலையத்துடன் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15.06.2025) யாழ்.ஏழாலை தெற்கில் அமைந்துள்ள தனியார் வர்த்தக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 43 பேர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.