நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை சனிக்கிழமை (21.06.2025) காலை-09 மணியளவில் யாழ் நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
அபிஷேகம், திருமுறை, நற்சிந்தனை ஓதுதலைத் தொடர்ந்து முற்பகல்- 10.30 மணியளவில் நாவலர் நல்லாசி எனும் தலைப்பில் ஓய்வுநிலைப் பொறியியலாளர் வேதநாயகம் இரகுநாதன் சிறப்புரை ஆற்றுவார். (18)