புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் திருவாசகம் முற்றோதல் நாளை



யாழ்.புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (06.01.2023) இடம்பெற உள்ளது.  

நாளை அதிகாலை திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் விசேட பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி வீதி உலா வருவார்.    

தொடர்ந்து காலை-09 மணிக்குத் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெறும் எனவும், நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மேற்படி ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ பா.சுந்தரசர்மா தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)