கோண்டாவிலில் நாளை குடைச் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு

ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (26.03.2023) யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெற உள்ளது. 

நாளை காலை-08.30 மணியளவில் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமாகும். தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் குருபூசை நிகழ்வுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நண்பகல் விசேட அன்னதானமும் இடம்பெறும்.