பால் தேநீரின் விலையைக் குறைக்க நடவடிக்கை!


ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தற்போது ஒரு கோப்பைப் பால் தேநீர் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந் நிலையில் ஏப்ரல் மாதத்தின் முதல் பகுதியிலிருந்து இறக்குதி செய்யப்படும் பால்மாவின் விலையைக் குறைப்பதற்குப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோக் கிராம் பால்மா விலை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மா விலை 80 ரூபாவாலும் குறைக்கப்படும் எனப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு அமையவே பால் தேநீரின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.