தேசியமட்டக் கணித ஒலிம்பியாட் போட்டிக்குப் பார்கவின் தெரிவு!

       

பிரிவு-1 மாணவர்களுக்கான மாகாண மட்ட  கணித ஒலிம்பியாட் போட்டிப் பரீட்சையில் யாழ்.மயிலணி  சைவமகா வித்தியாலயத்தில் தரம்-06 இல் கல்வி கற்கும் மாணவரான சு.பார்கவின் இரண்டாமிடம் பெற்றுத் தேசியமட்டக் கணித ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.

தேசியமட்டக் கணித ஒலிம்பியாட் பரீட்சை சனிக்கிழமை (14.06.2025) கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் இடம்பெறவுள்ள நிலையில் இந்தப் போட்டியில் குறித்த மாணவன் பங்குபற்றவுள்ளார்.