அகமதாபாத் விமான விபத்து: வெளியான உயிரிழப்பு விபரம்!

இந்தியா குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் இன்று வியாழக்கிழமை (12.06.2025) புறப்பட்ட 10 நிமிடங்களில் மேகனி நகரில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  

குறித்த விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். இந்த விபத்தில் 242 பேர் பயணித்த நிலையில் ஒருவரைத் தவிர விமானத்தில் பயணித்த ஏனைய அனைவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.