இணுவிலைச் சேர்ந்த கலாபூஷணம்.பண்டிதை வைகுந்தம் கணேசபிள்ளை எழுதிய நாட்டிய நாடகத் தொகுப்பு இரண்டாம் பாகம் நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை சனிக்கிழமை (14.06.2025) பிற்பகல்-02 மணியளவில் இணுவில் பொதுநூலக கலாசார மண்டபத்தில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருநெறிய தமிழ்மறைக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட ஓய்வுநிலைப் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை அதிபர் திருமதி.குககுமாரி விஜயரகுநாதன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.இணுவில் இந்துக் கல்லூரியின் அதிபர் இளையதம்பி துரைசிங்கம், வலிகாமம் தெற்கு கலை, கலாசார உத்தியோகத்தர் திருமதி.விஜிதா செல்வகுமார் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் சிவஸ்ரீ சோ.அரவிந்தக் குருக்கள் ஆசியுரை வழங்கவுள்ளார். பேராசிரியர் வ.மகேஸ்வரன் வாழ்த்துரையையும், அறிமுகவுரையையும் ஆற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து கலாகீர்த்தி திருமதி. சாந்தினி சிவனேசன், திருமதி.கமலராணி கிருஷ்ணபிள்ளை ஆகியோர் வாழ்த்துரைகளை நிகழ்த்தவுள்ளனர். ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் திருநெறியக் கழகத் தலைவர் ச.முகுந்தன் நூல் வெளியீட்டுரையையும், ஆசிரிய ஆலோசகர் பா.மகாலிங்கசிவம் நூல் மதிப்பீடும் மற்றும் நயப்புரையையும் வழங்குவர். ' இராம காதை' நாட்டிய நாடகமும் இடம்பெறும்.
இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.