இந்தப் போரில் ஈரான் தனியாக இல்லை எனப் பழிவாங்கும் பாணியில் வடகொரிய ஜனாதிபதி தனது கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்தப் போரில் ஈரான் தனியாக இல்லை. நாங்கள் அவர்களுக்கு அனைத்து வகையான ஆதரவும், உதவியும் வழங்கத் தயார். இஸ்ரேல் என்றால் ஏதாவது நாடு அல்ல. அது மத்திய கிழக்குப் பகுதியிலுள்ள வெறும் அமெரிக்க இராணுவத் தளம் மட்டுமே. அதன் அனைத்து நடவடிக்கைகளும் வாஷிங்டனின் கட்டளைகளுக்கே உட்பட்டவை. அமெரிக்கா என்பது குற்றங்களுக்கு வழிவகுக்கும் ஒரு குற்ற நாடாகும். உலகின் மிகப் பெரிய அணுஆயுதக் களஞ்சியத்தை வைத்திருப்பது மட்டுமின்றி அணுகுண்டுகளை முதன்முறையாகப் பயன்படுத்திய நாடும் அமெரிக்கா தான்.
எந்த நாடும் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானை தாக்கும் முயற்சி செய்தால் அதுவே எங்களுக்கெதிரான போர் அறிவிப்பாக கருதப்படும். அப்படி என்றால் நாங்கள் நேரடியாகப் போர் களத்தில் இறங்கி இஸ்ரேலை எங்கள் முழுப் படை வலிமையுடன் தாக்குவோம்
வடகொரிய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு உலகளாவிய மாறுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இந்தக் கடுமையான நிலைப்பாடு தற்போது நீடிக்கும் மத்திய கிழக்குச் சமரசத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்குவதாகக் கருதப்படுகின்றது.