யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் இந்தியத் துணைத் தூதுவருடன் சந்திப்பு

யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் திருமதி.மதிவதனி விவேகானந்தராசா, யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி ஆகியோருக்கிடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு திங்கட்கிழமை (16.06.2025) யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் நடைபெற்றது.

சந்திப்பின் போது புதிய யாழ்.மாநகர முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மதிவதனி அம்மையாரை யாழ் இந்தியத் துணைத்தூதுவர் வாழ்த்தி வரவேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையே யாழ்.மாநகரசபை மற்றும் இந்தியத் துணைத்தூதரகத்தின் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய வேலைத்திட்டங்கள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.