உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் தமிழ்மொழி மூலமான விடைத்தாள்களை மதிப்பிடும் ஆரம்பக் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி, சங்கீதம், நடனம், சித்திரம், நாடகக் கலை உள்ளிட்ட சில பாட விடயதானங்களுக்கான விடைத் தாள்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு மத்திய நிலையங்களில், இந்தப் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.