கோப்பாயில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

கோப்பாய் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம், கேள்வர் நாம் அமைப்பு என்பன இணைந்து விபத்தொன்றில் உயிரிழந்த கோப்பாயைச் சேர்ந்த அமரர்.மகிந்தனின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை(13.05. 2023) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை சரவணபவானந்தா பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள கோப்பாய் மாதர்சங்கக் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், குருதிக் கொடை ஆர்வலர்களையும் உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்து கலந்து கொள்ளுமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0766622218, 0766687754, 0774583973  ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.