புங்குடுதீவில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டுப் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் இளையோர் மன்றத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை(15.05.2023) காலை-09 மணி முதல் மேற்படி ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. 

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு  இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.