வடக்கு மாகாண சபை வளாகத்தில் நாளை இரத்ததான முகாம்

கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை வளாகத்தில் நாளை புதன்கிழமை(03.05.2023)  காலை-09 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை இரத்ததான முகாம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.