யாழ்.பல்கலைக்கழகத்தில் சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமையை முன்னிட்ட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலைவட்டத்தின் ஏற்பாட்டில் 'சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி' எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி நாளை புதன்கிழமை(23.08.2023) பிற்பகல்-02.30 மணியளவில் மேற்படி பல்கலைக்கழக நுண்கலைத் துறை காட்சிக் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

குறித்த கண்காட்சியை அடுத்தவாரம்-31 ஆம் திகதி வியாழக்கிழமை வரையான தினங்களில் காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை அனைவரும் பார்வையிட்டுப் பயன்பெற முடியுமென  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.