நல்லூரானின் முதலாம் நாள் மாலை உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் முதலாம் நாள் மாலை உற்சவம் இன்று திங்கட்கிழமை(22.08.2023) மாலை சிறப்பாக நடைபெற்றது.

மாலை-05 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வேற்பெருமான், வள்ளி- தெய்வயானை நாயகியர் அடியவர்கள் புடைசூழ உள்வீதியிலும், பின்னர்             வெளிவீதியில் வேற்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், வள்ளி-தெய்வயானை நாயகியர் அன்ன வாகனத்திலும் உலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தனர்.



இன்றைய மாலை உற்சவத்தில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)