ஈவினை கற்பக விநாயகர் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

ஈவினை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை(19.09.2023) காலை-10 மணியளவில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகியது.

தொடர்ச்சியாகப் பதினொரு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறும். எதிர்வரும்-25 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-08 மணியளவில் கைலாசவாகனத் திருவிழாவும், 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-08 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை இரவு-08 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 28 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09.30 மணியளவில் முத்தேர் பவனியும், 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07.30 மணியளவில் கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறுமென மேற்படி ஆலயத்தின் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 

(செ.ரவிசாந்)