தங்க மயிலேறி வந்தான் தமிழுலகு ஆளும் நல்லூர்க் கந்த வேற்பெருமான்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழாவின் பத்தொன்பதாம்  திருவிழா மாலை உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(08.09.2023) மாலை சிறப்பாக நடைபெற்றது.  

இன்று மாலை வசந்தமண்டபப் பூசை, கொடித்தம்பப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லூர்க் கந்த வேற்பெருமான் தங்க மயில் வாகனத்திலும், வள்ளி- தெய்வயானை நாயகியர் பச்சை மயில் வாகனங்களிலும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ உள்வீதியிலும், மாலை-06 மணியளவில் வெளிவீதியிலும் உலா வந்த காட்சி காண்பதற்கு அரிய காட்சியாக அமைந்தது.

(செ.ரவிசாந்)