ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நாளை

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (15.10.2023) நடைபெறவுள்ளதாகவும்,  2888 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள பரீட்சையில் மூன்று லட்சத்து 596 மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ் வருடப் பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டும். அனர்த்தங்கள் அல்லது அவசர நிலை காரணமாகப்  பரீட்சை நிலையத்திற்கு வர முடியாத மாணவர்கள் அருகில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

உரிய நேரத்தில் மாணவர்களைப் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.