காரைநகரில் நாளை கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

காரைநகர் பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டுக் காரைநகர் பிரதேச சனசமூக நிலையங்களுக்கு இடையே நடாத்தப்படும் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நிகழ்வு நாளை சனிக்கிழமை(04.11.2023) மாலை-03 மணியளவில் காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் கி.விஜயேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நிகழ்வில் காரைநகர் அமரர்.சண்முகம் மனோன்மணி ஞாபகார்த்த நிதியத்தைச் சேர்ந்த கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்வில் சனசமூக அமைப்புக்கள், விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள், அபிமானிகள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு காரைநகர் பிரதேச சபையினர் கேட்டுள்ளனர்.