நெடுந்தீவில் கைதான 23 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றுச் சனிக்கிழமை(03.02.2024) நெடுந்தீவுக் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 கைதான மீனவர்கள் அனைவரும் இன்று காலை காங்கேசன்துறைக் கடற்படைமுகாமிற்கு அழைத்துச்  செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறைத்  திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது 23 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.