ஊர்காவற்துறை நாரந்தனை றோ.க.மகாவித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புலம்பெயர் வாழ் உறவுகளின் நிதி அனுசரணையில் ஊர்காவற்துறை நாரந்தனை றோ.க.மகாவித்தியாலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 52 மாணவர்களுக்கு இலவசக் கற்றல் உபகரணங்கள் மற்றும்  மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (22.03.2024) முற்பகல்-11.30 மணியளவில்  மேற்படி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.


இதன்போது பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய கிராமப் புற மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் செயல்திட்டத்தின் இரண்டாவது பகுதியாக மொத்தமாக ஒரு லட்சத்து 33,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மற்றும் பயன்தரு மரக்கன்றுகள் நேரடியாகக் கையளிக்கப்பட்டன. அத்துடன் பாடசாலை வளாகத்திலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.