ஏப்ரல் மாதத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு!

           


2024 பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் 10,000 ரூபா வேதன அதிகரிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இந்த தொகை ஏப்ரல்-10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளது. 

இதேவேளை, ஓய்வூதியக் கொடுப்பனவாக அதிகரிக்கப்பட்டுள்ள 2500 ரூபா தொகை ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.