கோண்டாவில் ஞானப்பழனி முருகனுக்கு நாளை தேர்த் திருவிழா

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனி முருகன் ஆலயக் குரோதி வருட மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை (21.05.2024) முற்பகல்-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் புதன்கிழமை (22.05.2024) முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.