யாழ்ப்பாணத்தில் நாளை இரத்ததான முகாம்

 

யாழ்ப்பாணம்  போதனா மருத்துவமனை இரத்தவங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு விதையனைத்தும் விருட்சமே குழுமம் மற்றும் குறிஞ்சி கிறியேஷன்ஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (19.10.2024) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-03.30 மணி வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.