முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரிச் சமூகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை (23.10.2024) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை மேற்படி கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.