யாழ்ப்பாணம் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை செவ்வாய்க் கிழமை (04.02.2025) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறைச்சாலையின் அத்தியட்சகர் சீ. இந்திரகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், குருதிக் கொடையாளர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.