இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு எதிராகப் பிரித்தானியா விதித்துள்ள தடைகளை வரவேற்பதாகவும், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலின் மற்றுமொரு முக்கிய கட்டமாக இது அமைந்துள்ளதாகவும் கனடா நீதி அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையின் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கையாக இது காணப்படும். 2023-இல் கனடா மகிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும்'' என்றுள்ளது.