வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலை அடிப்படைக் கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை(08.03.2025) காலை-06 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை-06 மணி முதல் காலை-08 மணிவரை இடம்பெறும் இவ்வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் வயது வேறுபாடின்றிக் கலந்து கொள்ள முடியும். சுமார் மூன்று மாத காலங்களைக் கொண்டமைந்த இவ் அடிப்படைக் கற்கைநெறியைப் பூரணமாக முடிப்பவர்களுக்குக் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படவிருக்கின்றன. பயில விரும்புவோர் அன்றைய தினம் நேரடியாக வந்து பதிவுகளை மேற்கொண்டு வகுப்பில் இணைந்து கொள்ளுமாறும் மேலதிக தகவல்களை 0212222203 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.