2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (23.03.2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகங்களிலிருந்து பெறப்படும் வரிசையில் வாக்குச் சீட்டுக்கள் தொடர்பான விபரங்கள் அச்சகத்திற்கு அனுப்பப்படுமெனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.