உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழாலையில் மாபெரும் இரத்ததான முகாம்

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழாலை இந்து இளைஞர் சபையினரின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (01.05.2025) காலை-08.30 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.