யாழில் இன்று தங்கம் கொள்வனவு செய்யும் அனைவருக்கும் விசேட சலுகையும் பரிசில்களும்!

அட்சய திருதியை நன்னாளான இன்று புதன்கிழமை (30.04.2025) காலை-07 மணி முதல் இரவு-09 மணி வரை தங்கம் கொள்வனவு செய்யும் அனைத்து மக்களுக்கும் விசேட சலுகையும், தங்கம் கொள்வனவு செய்யும் அனைத்து மக்களுக்கும் சிறப்புப் பரிசில்களும் வழங்கப்படுமென யாழ்.நகரில் இயங்கி வரும் சிறிநதியா நகைமாளிகையின் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான ந.சத்தியரூபன் தெரிவித்துள்ளார்.   

தங்கம் என்ன விலை விற்றாலும் எங்களுடைய செயற்பாடுகள் தொடர்ந்து  கொண்டு தானிருக்கும். மக்கள் தங்கள் வசதிக்கேற்ப குறைந்தளவு நிதியில் தங்கத்தைப் பெற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு விசேட சலுகையும், சிறப்புப் பரிசில்களும் வழங்கப்படும். அதுமாத்திரமல்லாமல் இன்றைய நாளில் மக்கள் தம்மிடமுள்ள பழைய தங்கங்களை எம்மிடம் தந்து அதற்கு மாற்றீடாகப் புதிய தங்கங்களையும் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.