கொழும்பை வந்தடைந்த உலகின் மிகப் பெரிய கப்பல்!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான எம்எஸ்சி மரியெல்லா (MSC Mariella) கப்பல் செவ்வாய்க்கிழமை (28.04.2025) கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வந்தடைந்தது.

மேற்கு ஆபிரிக்காவின் லைபீரியாவைச் சேர்ந்த குறித்த கப்பலானது 399.90 மீற்றர் நீளமும், 61.30 மீற்றர் அகலமும் கொண்டது. இக் கப்பல் 24,246 கொள்கலன்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதெனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எம்எஸ்சி மரியெல்லாவின் வருகை இலங்கையின் கடல்சார் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல் என இலங்கைத் துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.