திருநெல்வேலி அரசடி சிவகாமசுந்தரி அம்பாள் பெருவிழா ஆரம்பம்


யாழ்.திருநெல்வேலி  அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவப் பெருவிழா நேற்றுத் திங்கட்கிழமை (28.04.2025) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம்-10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை -08 மணியளவில் தேர்த் திருவிழாவும், 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-08 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.