உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (29.04.2025) நிறைவடையவுள்ளது.
உள்ளூராட்சிசபைத் தேர்தல் எதிர்வரும் மேமாதம்-06 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு நான்கு நாட்கள் ஒதுக்கப்பட்டன. இதன்படி, கடந்த 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முதற் கட்டமாக அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் நேற்றுத் திங்கட்கிழமை (28.04.2025) மூன்றாவது நாளாக வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் இறுதியாக இன்றையதினம் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் வாக்களிக்க தவறிய தகுதிபெற்ற அரச உத்தியோகத்தர்கள் தவறாமல் இன்றைய தினம் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.