எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் தந்த ஆணை!

ஜேவிபியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தது தவறு என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்குத் தந்த ஆணையாகப் பார்க்கின்றேன் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.