வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிறுத்தல் அளக்கும் உபகரணங்களைச் சரிபார்த்தல் மற்றும் முத்திரை இடும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை (27.05.2025), சுன்னாகத்தில் அமைந்துள்ள வலிகாமம் தெற்குப் பிரதேசசபையின் தலைமை அலுவலகத்திலும், நாளை மறுதினம் புதன்கிழமை (28.05.2025) வலிகாமம் தெற்குப் பிரதேசசபையின் சுன்னாகம் உப அலுவலகத்திலும், எதிர்வரும் வியாழக்கிழமை (29.05.2025) வலிகாமம் தெற்குப் பிரதேசசபையின் ஏழாலை உப அலுவலகத்திலும் இடம்பெறவுள்ளது.
இப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் தமது நிறுத்தல் உபகரணங்களைச் சரிபார்த்து முத்திரையிட்டுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.