யாழில் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ள சுவரொட்டிகள்!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி சபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாழ். மாவட்டத்தின் பல  பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

"யாழ்ப்பாணக் கல்விச் சமுகம்" எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்தச் சுவரொட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்பான வாக்காளரே! மூன்று கோமாளிகளும், ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.