உள்ளுராட்சித் தேர்தலுக்கு நிதி வழங்காமைக்கு எதிராக மனுத் தாக்கல்


உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி வழங்காமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று செவ்வாய்க்கிழமை(21.02.2023) உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற  உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைத் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு விடுவிக்காதிருக்க எடுத்த தீரமானத்தின் மூலம் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகத் தீர்மானித்து உத்தரவு பிறப்பிக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.