நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் மஹோற்சவம் ஆரம்பம்

யாழ். நயினாதீவு பெருங்குளம் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை(20.02.2023) பிற்பகல்-12.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பதினொரு தினங்கள் பகல், இரவு உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெற உள்ளது.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 29 ஆம் திகதி புதன்கிழமை காலை-09.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள்-30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-06 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.