மூன்று மாதங்களில் நீக்கப்படும் QR முறைமை!


எரிபொருள் விநியோகத்திற்காகத் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை எதிர்வரும் மூன்று மாதங்களின் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.