அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைத் கருத்தில் கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும்-10 ஆம் திகதிக்கு முன்னர் இந்த மாதத்துக்கான கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.

ஓய்வூதியம் மற்றும் சமுர்த்திக் கொடுப்பனவுகளும் குறித்த திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலையில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்